மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் 'ஹெபடைடிஸ் பி” நோயை கட்டுப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று புதன்கிழமை (17) அறிவித்துள்ளது.
இரண்டு நாடுகளும் அதிகளவான குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை மற்றும் நோயினால் குறைந்தளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"சுகாதாரத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்த நாட்டு மக்கள் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், மாலைதீவு மற்றும் இலங்கையின் சாதனைக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
ஹெப்படைடிஸ் பி என்பது ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இது கல்லீரலைப் பாதிக்கிறது மற்றும் கடுமையான (குறுகிய கால) அல்லது நாள்பட்ட (நீண்ட கால) நோயை ஏற்படுத்தலாம். குழந்தைகளிடையே நீண்டகால தொற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM