வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. அதற்கான பிரதிஷ்டா கிரியைகள் இன்று புதன்கிழமை (17) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
தொடர்ந்து, எதிர்வரும் 21.01.2024 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை (23) மாலை 05 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து, மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் முற்பகல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயத் திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேச கிரியைகளை நடாத்துவதற்காக 27 சிவாச்சாரியார்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM