மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

17 Jan, 2024 | 09:43 AM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை  (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு  கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்பின்னர் 18 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில்  நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33