தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற T 750, T 709 மற்றும் T 200 தேயிலை உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (16) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை முன்வைத்துள்ளார்.
இதன்படி சந்தையில் உள்ள தேயிலை உரங்களின் விலையானது 100 க்கு 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள தேயிலை உரங்களின் ஒரு மூடையின் மொத்த விலை 13,000 ரூபாவாகும்.
இந்நிலையில் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற T 750 மற்றும் T 709 உரங்களின் ஒரு மூடை விலை 7,735 ரூபாவாகவும் T 200 உரத்தின் ஒரு மூடை விலை 5,500 ரூபாவாகவும் குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த 2,000 ரூபா உரச்சலுகைகள் அனைத்து தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து உரங்களின் வகைகளும் தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு 9,735 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது.
இந்த உரச்சலுகைகளுக்கு மேலதிகமாக தேவைப்படும் 1,200 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலை சபை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM