மின்கட்டணத்தை 03.34 சத வீதத்தால் குறைக்கும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு!

Published By: Vishnu

14 Jan, 2024 | 05:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டணத்தை 03.34 சதவீதத்தால் குறைப்பதற்கு மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைக்கு பொதுமக்கள் உட்பட சிவில் தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மின்சார சபை கடந்த ஆண்டு மாத்திரம் 61 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெற்றுள்ளது. ஆகவே உண்மை தரப்படுத்தலுக்கு அமைய மின்கட்டணத்தை 15 சத வீதமளவில் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேகொட தெரிவித்தார்.

மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று சனிக்கிழமை முன்வைத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 03.34 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் காமினி லொகுகே குறிப்பிடுகையில்,

மின்கட்டணத்தை நூற்றுக்கு 300 சதவீதமளவில் உயர்த்தி விட்டு 03.34 சதவீதத்தால் குறைப்பதற்கு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளமை நகைப்புக்குரியது. மின்சார சபை கடந்த ஆண்டு மாத்திரம் 61 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெற்றுள்ளது. ஆகவே உண்மை தரப்படுத்தலுக்கு அமைய மின்கட்டணத்தை 15 சதவீதமளவில் குறைக்க முடியும்.

மின்சார சபையின் யோசனைகள் அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கு சாதகமான வகையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.மின்கட்டண குறைப்பு தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக பல யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளோம்.

மின்சார சபையின் நோக்கத்துக்கு அமைய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்படுமாக இருந்தால் ஆணைக்குழுவை கலைத்து பொறுப்புகளை மின்சார சபைக்கு வழங்கலாம்.இன்னும் 8 மாத காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கடும் விசனம்

இதேவேளை, மாத வருமானம் மின்கட்டணத்துக்கும், நீர்கட்டணத்துக்கும் போதுமானதாக இல்லாத நிலையில் மின்கட்டண திருத்தம் ஊடாக நிச்சயம் நிவாரணம் வழங்க வேண்டும்.1 ரூபா அளவில் மின்கட்டணத்தை குறைப்பதால் எவருக்கும் பயன் கிடைக்காது.அதற்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் இருக்கலாம்.நடுத்தர மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அரசாங்கம் உணர்வுபூர்வமாக அறியவில்லை என்று  பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15