கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் : முகாமைத்துவத்தை மாற்றியமைக்க அவதானம் - நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர்

14 Jan, 2024 | 12:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல் தொடர்பில் விரிவாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், கந்தக்காடு முகாமைத்துவத்தை மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கைதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கைதுகள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல்கள் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தி;ன் முகாமைத்துவத்தை மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள புனர்வாழ்வு மத்திய நிலையங்களை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும். அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட தீர்மானித்துள்ளேன் என்றார்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து 140 இற்கும் அதிகமான கைதிகள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் அவர்களே ஆஜராகினர்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய கைதிகள் தம்மை துன்புறுத்துவதால் பாதுகாப்பு கருதி புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் செல்வதாக கைதிகள் குறிப்பிடுகின்றமை அவதானத்துக்குரியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14