நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

Published By: Vishnu

14 Jan, 2024 | 11:49 AM
image

தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கும்  தீர்வு  காணப்­ப­ட­வேண்­டி­யதன்  அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு  வரு­கின்­ற­போ­திலும் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் இந்த விட­யங்கள் தொடர்பில்   உரிய அக்­கறை காண்­பித்­தி­ருக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு  மேலெ­ழுந்­துள்­ளது.

இறுதி யுத்­தத்தின் போது  இடம்­பெற்ற  மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில்  உரிய விசா­ர­ணைகள்  நடத்­தப்­பட்டு  பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட  வேண்டும் என்று  சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமை  பேர­வையில் 2012ஆம் ஆண்டு முதல்  இலங்­கைக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு  பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம்  அக்­கறை காண்­பிக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.  ஆனாலும்  கடந்த காலங்­களில்  ஆட்­சி­யி­லி­ருந்த  அர­சாங்­கங்கள்  பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உரிய அக்­க­றை­யினை செலுத்­தி­யி­ருக்­க­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஓர­ளவு இணக்­கப்­பாட்­டினை தெரி­வித்­தி­ருந்த போதிலும்   உரிய தீர்­வினை பெற்­றுக்­கொள்ளும் வகையில்  அந்த செயற்­பாடும்  அமைந்­தி­ருக்­க­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்க காலத்தில்  காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­லகம்  அமைக்­கப்­பட்­ட­துடன்   நட்­ட­ ஈட்­டுக்­கான செயற்­றிட்­டமும்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.   அத்­துடன்  உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­பது தொடர்­பிலும்  கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.  ஆனாலும் 2019ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து இந்த நட­வ­டிக்­கை­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன.

தற்­போது  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின்   உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  நீதி அமைச்சர்  விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்த சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 48 வாக்­கு­களும் எதி­ராக 7  வாக்­கு­களும் அளிக்­கப்­பட்ட நிலையில் 41 மேல­திக வாக்­கு­களால்  சட்­ட­மூலம்   சபையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. தேசிய ஒற்­று­மைக்கும்  நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்தை  ஸ்தாபிக்கும் வகை­யி­லேயே   இந்த  சட்­ட­மூலம்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.   இந்த சட்­ட­மூ­லத்­துக்கு  தமிழ்த்  தேசியக் கட்­சி­களின்  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் ஏழு பேரே எதிர்ப்பு  தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இந்த சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உரை­யாற்­றிய   நீதி அமைச்சர்   விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­ ,இலங்­கையில்  எவரும்  இரண்டாம் தர பிர­ஜைகள் அல்ல.  அனை­வரும்  இலங்­கை­யர்கள் என்­பதை   உறு­திப்­ப­டுத்­து­வதே  நல்­லி­ணக்க சட்­ட­மூ­லத்தின் பிர­தான எதிர்­பார்ப்­பாகும் என்று  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அத்­துடன்   தேசிய ஒற்­று­மைக்கும்  நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­லகம் என்­பது முக்­கி­ய­மா­னது.  இது இன்று நேற்று  ஆரம்­ப­மான பேசு­பொ­ரு­ளல்ல  முன்னாள்  ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியில்  யுத்த சூழலில் போது இந்த அலு­வ­ல­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அப்­போது  நிர்­வாக மட்­டத்தில்  மாத்­திரம்   அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இதற்கு  அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டுள்­ளது   என்றும்  அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட  தமிழ் மக்­களின்  அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வை  காண்­ப­தற்கும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில்   உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் வகை­யி­லுமே உண்மை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்கு  நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக  அர­சாங்கம் தெரி­வித்து வரு­கின்­றது. ஆனாலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த அலு­வ­லகம் தொடர்பில் தமது நம்­பிக்­கை­யீ­னத்தை  தொடர்ச்­சி­யாக   வெளிப்­ப­டுத்­தி ­வ­ரு­கின்­றனர்.

யுத்­தத்தின் வடுக்­க­ளாக காணப்­படும்  காணா­மல்­போனோர் விவ­காரம், தொடர்பில் இன்­னமும்  அர­சாங்கம்  உரிய தீர்­வினை காண­வில்லை. காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது  என்­ப­தனை அறி­வ­தற்­காக மக்கள் தொடர்ச்­சி­யா­ன­ போ­ராட்­டங்­களை தற்­போதும் நடத்­தி ­வ­ரு­கின்­றனர். 

காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­லகம்  அமைக்­கப்­பட்­டுள்ள போதிலும்  அந்த அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­க­ளினால்   இது­வரை  எந்­தப்­ப­யனும்  ஏற்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.  அடுத்த  வரு­டத்­துக்குள்   காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தில்  செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு தீர்வு வழங்­கப்­படும் என்று  நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­  பாரா­ளு­மன்­றத்தில் கடந்­த­வாரம் உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

ஆனால்  ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. இந்த நிலை­யில்தான்   யுத்­தத்­தினால் ஏற்­பட்ட  பாதிப்­புக்­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் உண்மை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தை   அமைப்ப­தாக அர­சாங்கம்  கூறு­கின்­றது.  ஆனால் இந்த  அலு­வ­ல­கத்தின் மூலம்  யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடி­யுமா என்­பது தொடர்பில் பெரும் சந்­தே­க­மான நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

 இந்த நிலையில் யுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் 2025ஆம் ஆண்­டாகும் போது  தீர்வு வழங்­கப்­படும். இடம்­பெ­யர்ந்தோர்  மற்றும் காணா­மல்­போ­ன­வர்­களின் பிரச்­சினை தொடர்­பாக அர­சியல்  ரீதி­யி­லான தீர்­வுகள்   காணப்­படும் என்று  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க   தெரி­வித்­தி­ருக்­கின்றார். கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச  ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில்   இடம்­பெற்ற   கொழும்பு இளைஞர் பெளத்த சங்­கத்தின்  125 ஆவது ஆண்டு விழாவில்  கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இந்த விட­யத்தை  குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இதே­போன்றே கடந்த   செவ்­வாய்க்­கி­ழமை  ஜனா­தி­பதி செய­லக வளா­கத்தில் இடம்­பெற்ற   சேர்.  பொன். அரு­ணாச்­ச­லத்தின்  நூற்­றாண்டு  நினை­வு­தின நிகழ்வில்   பங்­கேற்ற  ஜனா­தி­பதி  ரணில் விக்­கி­ர­ம­சிங்க,                        சுதந்­தி­ர­மான தேசத்தை  கட்­டி­யெ­ழுப்ப  சேர்.பொன். அரு­ணா­ச­லத்தின்  ‘‘இலங்­கையர்’’  என்ற எண்­ணக்­க­ருவை  ‘‘ இலங்­கை­யர்­களின் தேவைகள் ’’  என்ற வகையில்  மேம்­ப­டுத்த   அர்ப்­ப­ணிப்­புடன்   செயற்­ப­டு­கின்றோம். 

அந்த  வேலைத்­திட்­டத்தை  பலப்­ப­டுத்தும் வகையில்   யுத்தம் சார்ந்த  பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் 2025க்குள்  தீர்வு காண  எதிர்­பார்க்­கின்றோம்  என்று  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். சேர்.பொன் அரு­ணாசலம் தமிழ் சிங்­கள,  முஸ்லிம்   என்று அல்­லாமல்  இலங்­கையர் என்ற எண்­ணக்­கரு தொடர்பில்   அதிக  நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அந்தக் கொள்­கையை  பின்­பற்­றிய டி.எஸ். சேனா­நாயக்க   அனைத்து இனத்­த­வ­ரையும் மதத்­த­வ­ரையும்  ஒன்­றி­ணைத்­துக்­கொண்டு நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு வழி வகுத்தார் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

யுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் அடுத்­த­வ­ரு­டத்­துக்குள் தீர்­வு­கா­ணப்­படும் என்று ஜனா­தி­பதி  தெரி­வித்­துள்­ளமை  வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும்.  ஆனால்  அதற்­கான  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுமா? அதற்­கான அர­சியல்  சூழ்­நிலை எதிர்­கா­லத்தில் நில­வுமா? என்ற கேள்­விகள்  தற்­போது  எழு­கின்­றன.

யுத்­தத்தின் கோரத்­தினால்   தமிழ் மக்கள் பெரும் அழி­வு­களை சந்­தித்­தனர். உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் இழந்து அநா­த­ர­வாக்­கப்­பட்ட தமிழ் மக்கள் இன்றும்   தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­கோரி நிற்­கின்­றனர்.  காணா­மல்­போனோர்  பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிகள் இன்­னமும் முழு­மைாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. 

வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட ஆக்­கி­ரமிப்­புக்கள் தொடர்ந்து வரு­கின்­றன. மீள் குடி­யேற்றம் இன்­னமும் நிறை­வு­றுத்­தப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­திலும் முழு­மை­யான தீர்வு எட்­ட­வில்லை.  யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் இன்­னமும் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்­னமும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வாறு  யுத்­தத்தின்  வடுக்­களைப் போக்­கு­வ­தற்கு அர­சாங்­க­மா­னது  இத­ய­சுத்­தி­யுடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன்  யுத்­தத்­துக்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சி­யல்­தீர்வு காணும் விட­யத்தில்  அக்­கறை  செலுத்­தப்­பட வேண்டும்.   இவ்­வாறு  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டால்தான்  இலங்­கையர் என்ற  மனப்­பாங்­குடன்  சகல மக்­களும்  ஒன்றிணைந்து  நாட்டை கட்டியெழுப்பும் நிலை ஏற்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை   வலியுறுத்தி வருகின்றார். பிரச்சினைகளுக்கு  தீர்வுகாணப்படும் என்று உறுதிமொழியும் வழங்கி வருகின்றார். ஆனால்  அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான அரசியல் சூழ்நிலை தற்போது   காணப்படுகின்றதா?   என்று  சிந்திக்கவேண்டியுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மூலமாக   பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவே தெரிகின்றது. 

ஆனால்  அந்த அலுவலகத்தின் மீது  பாதிக்கப்பட்ட தரப்பினர்  நம்பிக்கை கொள்ளவில்லை. அவ்வாறாயின் எவ்வாறு  பிரச்சினைகளுக்கு தீர்வை  காணமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெறும் பேச்சளவிலன்றி செயற்பாட்டளவில்   பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண  முயற்சிக்கவேண்டும்.  இதற்கு சகல தரப்பினரும்  ஒத்துழைப்புக்களை வழங்கினால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கம்  சாத்தியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14
news-image

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானம்...

2024-01-07 12:15:27
news-image

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசியல் தீர்வும் அவசியம்

2023-12-31 17:06:11
news-image

இமயமலை பிரகடனமும் யதார்த்த நிலைமையும்

2023-12-24 19:04:39