தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் ஓளிக்கடவுளான சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தைத்திருநாளாகிய தைப்பொங்கல் விழாவை கடைபிடிக்கும் தமிழர்கள், தைத்திங்கள் முதலாம் நாள் புத்தரிசியினால் பொங்கல் பொங்கி விவசாயத்திற்கு கண் கண்ட தெய்வமாக அருள் பாலிக்கும் சூரிய பகவானுக்கு முதலில் படைத்து தன் நன்றியை வெளிப்படுத்தும் தொன்மை மிக்க திருநாளாக கொண்டாடுகின்றனர்.இதை "சூர்யப்பொங்கல்"எனவும் அழைப்பது வழக்கம். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புதுப் பானையில்,புத்தரிசியிட்டு, பொங்கல் பொங்கி, கரும்பு பழங்களுடன் கொண்டாடப்படும் பொங்கல் விழா கமத்தொழில் புரிவோர்களின் தெய்வாம்சம் நிறைந்த பண்டிகையாகும். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் சுபமுகூர்த்த நேரத்தில் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவகைக் காய்கறிகள் குறிப்பாக அவரை, புடலை, கத்திரியுடன், வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்.....
தமிழர் தேசிய விழா
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இலங்கை, இந்தியாவிலுள்ள சில கிருஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிர்க்கும் வழக்கத்தையும் கடைபிடிக்கின்றனர்.
உழவர் திருநாளாக, தமிழர் விழாவாக, கொண்டாடப்படும் தைப்பொங்கல்
இந்திர விழாவாகவும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைக்கும் கால் நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் தைப்பொங்கல் அமைகின்றது. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்கல் வைக்கும் முறை
தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.
நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகிப் பண்டிகை....
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ காப்புக்கட்டு நடைபெறும்.
போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையாளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விட்டு புதியனவைகளை வாங்கி இல்லத்தை செழிப்பாக்குதல் வழக்கமாகும். ஒரு பண்டிகையாக போகியை கொண்டாடுவது தொன்மை நிறைந்ததாகவும்.
பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் வரை கொண்டாடப்படுன்கிறது.
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில்,ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்கின்றனர்.
அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
விலங்குகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள்....
மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகளை நீராட்டி கொம்புகளுக்கு பட்டுச்சாத்தி,கழுத்துக்கு மலர் மாலை அணிவித்து,மணிகள் கட்டித் தொங்க விட்டு அழகு பரார்த்து விலங்குகளை விலங்குகளாக காணாமல் தெய்வத்துக்கு நிகராக போற்றும் மகோன்னத விழாவாக மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வழக்கம் தமிழர் நாகரிகத்தின் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாக நிகழும் கலாசாரம் மிக்க நிகழ்வாகும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு(பசு) நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்...
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாளில் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலையொட்டிய பிற விழாக்கள்.....
வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கிராந்தி எனவும் ஷங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
மகரம் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கிராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை கோலாகலமாக காெண்டாடுவர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்.....
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என கலித்தொகை சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றி பாடப்பட்டுள்ளது.தமிழர் நாகரிகத்திற்கு கட்டியம் கூறும்
விதமாக தைப்பொங்கல் விழாவின் சிறப்புகள் காணப்படுகின்றது.பொங்கல் விழாவையொட்டி நடைபெறுகின்ற மஞ்சு விரட்டு என்ற "காளை விரட்டு",அல்லது "ஏறு தழுவல்"என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் தமிழரின் தொன்மை நிறைந்த் வீரகலாசாரத்தையும்,பறைசாற்றும் வகையில் காணப்படுவது தமிழர்களின் வீரப்பிரதாபங்களை இவ்வகிலத்திற்கு காட்டும் சிறப்புகளை உள்ளடக்கியதாகும். தமிழகத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ,பாலமேடு, சூரியூர்,அலங்காநத்தம், தம்மம்பட்டி,கூலமேடு, காரிமங்கலம்,நார்த்தாமலை போன்ற நகர்களில் கோலாகலமாக "ஜல்லிக்கட்டு"நிகழ்வு இடம்பெறுவது வழக்கம். நகரங்களை விட கிராமங்களில் தைப்பொங்கல் தொன்று தொட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது நிறைந்த கலாசாரம் கொண்ட விழாவாகும்.தைப்பொங்கல் விழாவின் பூரண உரிமையுடையவர்கள் ஏர் பூட்டி,வயல் வெளிகளில் கமம் செய்து,தரணிக்கே உணவை வழங்கும் கடவுடளுக்கு நிகராக போற்றப்படும் விவசாயிகளே...!
"தைபிறந்தால் வழிபிறக்கும்
நம் தேசமும் சிறக்கட்டும்"
"அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்"
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM