யேமனில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்ட தாக்குதலிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு தெரிவித்துள்ளது.
யேமனில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் தீர்மானத்தை கடும் ஆலோசனைகளிற்கு பின்னர் வேறுவழியின்றி எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4 ம் திகதிஅவுஸ்திரேலியா உட்பட 14 நாடுகள் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு அவர்கள் தொடர்ந்தும் செங்கடல் பகுதியில்கப்பல்களை தாக்கினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் என எச்சரித்திருந்தன என ரிச்சர்ட்மார்லஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் கப்பல்களைதாக்கினார்கள் இதன் காரணமாகவே அவர்களிற்கு எதிராக இன்று தாக்குதல்நடத்தப்பட்டது என ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்
யேமன் மீதான தாக்குதலிற்கான தலைமையகத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் காணப்பட்டனர் எனவும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பிரிட்டனின்இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்விக்கு கடல்பயணத்தை பாதுகாப்பதும் உலகவர்த்தக பாதைகளை பாதுகாப்பதும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன்களிற்கு மிகவும் அவசியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM