பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டமானது இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இந்த பணி தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் கிட்டத்தட்ட 19,216 முன்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 37,000 முன்பள்ளி ஆசிரியர்கள் காணப்படுவதோடு பட்டதாரி ஆசிரியர்கள் 29,000 பேர் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM