அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம் - சஜித்

11 Jan, 2024 | 03:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர்  அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச தரப்பு உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினர்  துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியகூலா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக இராஜாங்க அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.

நாடு வங்குரோத்தாகி உள்ள இவ்வேளையில், அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு, அரசுக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு அதற்கு தேவையான எரிபொருள் செலவிட்டு எவ்வாறு கடல் நடுவில் விருந்துபசாரம் மேற்கொள்ள முடியும். துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு, குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

நான் தெரிவிக்கும் இந்த விடயம் உண்மை. அரசாங்கம் சவால் விடுவதாக இருந்தால், இதுதொடர்பான புகைப்படங்களை சபைக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் இவ்வாறு செயற்பட முடியுமா?

அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல. என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் இந்த 2 கப்பல்களுக்கும் ஏறுவதற்காக சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் எமக்கு ஆட்சேபனை இருக்கிறது.

நாட்டு மக்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இது பாரிய குற்றச்செயலாகும். இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07