பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இருவர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை முடித்துவிட்டு தனிப்பட்ட தேவை நிமித்தம் பண்டாரகம பிரதேசத்திற்கு சென்றுகொண்டிருந்த போது இரு சந்தேக நபர்களால் பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர்.
தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என சந்தேக நபர்களிடம் கூறியும் அவர்கள் தொடர்ந்தும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களது முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM