பெண்ணொருவரை கொலை செய்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

10 Jan, 2024 | 11:21 AM
image

பெண்ணொருவரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (09) தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக கடமையாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, கொல்லப்பட்டதாகவும் இந்த பெண்ணை கொன்ற சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த சந்தேக நபர் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவனெல்லையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது

2025-03-27 13:15:57
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை...

2025-03-27 13:29:25
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40