உலகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைபவர்களில் நான்காம் இடத்தில் உள்ளவர்கள் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.. முழுமையான விழிப்புணர்வு இல்லாததால் பத்து சதவீதத்திற்கும் மேற்பட்ட கணைய புற்றுநோயாளிகள் இறப்பை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் வகையில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரொபாடிக் சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய வயிற்றின் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்றுள்ள பான்கிரியாஸ் எனும் கணையம்.. நாம் சாப்பிடும் உணவை செரிமானம் அடைவதற்கான என்சைம் எனப்படும் நொதிகளையும், எம்முடைய உடலில் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இன்சுலின் எனும் ஹோர்மோனையும் உற்பத்தி செய்கிறது.
பல்வேறு தவிர்க்க வேண்டிய ஆனால் தவிர்க்காத உணவு முறைகளாலும் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளாலும் கணையத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்று வலி, பசியின்மை, திடீரென்று உடல் எடை குறைவு, தோல் மற்றும் கண் பகுதியில் நிற மாற்றம், சிறுநீர் நிறமாற்றம், அரிப்பு, கட்டுப்படுத்த இயலாது நீரிழிவு, ஒரு கை அல்லது காலில் வலியுடன் கூடிய வீக்கம்.. போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், கணைய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அவதானிக்கலாம்.
பெரும்பாலானவர்களுக்கு கணைய புற்றுநோய், உடலின் வேறு உறுப்புகளில் பரவிய பிறகு தான் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன், மரபணு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கணையத்தின் தலைப்பகுதி, உடல் பகுதி, வால் பகுதி என மூன்று பகுதிகளிலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். உங்களுக்கு எந்தப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவதானித்து, அதற்கேற்ப சத்திர சிகிச்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இம்யூனோ தெரபி போன்றவற்றை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி நிவாரணம் அளிப்பர்.
வேறு சிலருக்கு கணையத்தின் தலைப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிக்கலான சத்திர சிகிச்சையை திறந்த நிலையில் மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.
இதற்காக தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய ரொபட்டிக் சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இத்தகைய சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு நான்கு இடங்களில் மிகச்சிறிய அளவில் துளையிட்டு, அதனூடாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, கணைய புற்றுநோய் கட்டிகளை அகற்றி, முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர் சுவாமிநாதன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM