பணிப்புறக்கணிப்பில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சேவைகளை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு இது தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்து அத்தியாவசிய சேவை என ஊழியர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே மின்சார ஊழியர்கள் விடுமுறை அல்லது மருத்துவ விடுப்பில் பணிக்கு சமுகமளிக்காமல் திட்டமிட்டு சட்ட விரோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM