காலி சிறைச்சாலையில் 7 கைதிகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
5 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தமைக்கு மூளைக் காய்ச்சலே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களை பார்வையிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கும், புதிய கைதிகளை அகுணுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM