நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 3

05 Jan, 2024 | 12:46 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எமது நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.

கடந்த வருடம் மூவாயிரம் முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்காரணமாகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வருகிறோம். எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் இதனை நிறுத்த மாட்டேன். நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறினார். 

இது தொடர்பில் அவர்  மேலும் குறிப்பிட்டதாவது,

எமது நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம் என்பதை யுக்திய நடவடிக்கையின் போது தொடர்ச்சியாக கூறினோம். எந்த தடைகள் வந்தாலும் பின்வாங்காமல் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு வழங்க  மாட்டோம்.

கடந்த வருடம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அந்த 8 ஆயிரம் முறைப்பாடுகளில் மூவாயிரம் முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளாகும். இதன்காரணமாகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வருகிறோம்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்களில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக  என்னை தொடர்பு கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலையும் (நேற்று) தூதுவர் ஒருவர் தொடர்பு கொண்டார். ஏதோ ஒரு வகையில் இதனை நிறுத்துமாறு கூறினார். நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன். நான் இதனை நிறுத்த மாட்டேன். எதிர்வரும் 23 ஆம் திகதி இதனை கொண்டு வருவேன். இது தொடர்பில் யோசனைகளை 08 ஆம் திகதி முன்னர் தெரிவிக்க முடியும். அவர்களின் கருத்துக்களை இதில் உள்வாங்க முடியுமா என ஆராய்வோம். முடிந்தவற்றை செய்வோம். நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கவே இவை அனைத்தையும் செய்கிறோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07