தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவிஸின் எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருப்பதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவுள்ளார்.
இலங்கை - தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கடந்த 18 - 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியை அடுத்தே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.
கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றின் விளைவாக சுமார் 4 வருடகாலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த நவம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டன. இப்பேச்சுவார்த்தைகளின்போது வர்த்தகம் சார்ந்த நிபந்தனைகள், சேவை வழங்கல்கள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு என்பன தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின்கீழ் இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவிஸின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM