நாட்டில் தற்போது தட்டம்மை நோய் தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வருடம் மே மாதம் முதல் 710 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய 9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்தில் 232 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் , களுத்துறையில் 36 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோய் நிபுணர் தெரிவித்தார்.
பதிவாகியுள்ள 710 தட்டம்மை நோயாளிகளில் 123 பேர் ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஒன்பது மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான 93 குழந்தைகளும், 4 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 99 பேரும் , 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட 44 பேரும் , 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 246 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 105 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலுள்ள 6 முதல் 9 வயதுடைய குழந்தைகளுக்கு தட்டம்மைக்கான தடுப்பூசி ஜனவரி 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த மாவட்டங்களில் அமைந்துள்ள பொது சுகாதார பிரிவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தட்டம்மை நோயினால் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என்பதால், குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM