13 வயது பாடசாலை மாணவர்களை விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியை கைது

29 Dec, 2023 | 11:57 AM
image

அநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பாடசாலையில் விளையாட்டு ஆசிரியையாக கடமையாற்றும் 51 வயதுடைய பெண்ணாவார்.

இவர் குறித்த மாணவர்களது பெற்றோர்களிடம் கடந்த 27 ஆம் திகதி அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சிக்கு செல்வதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் மாணவர்களை  வீடுகளுக்கு அனுப்பாமல் எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் நபரொருவரிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த விடுதியில் இருந்து ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசு கட்சியின் பச்சிலைப்பள்ளி கிளை ஏற்பாட்டில்...

2025-05-17 17:30:57
news-image

யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய...

2025-05-17 17:16:01
news-image

நீர் நிரம்பிய குழியில் விழுந்து மூன்றரை...

2025-05-17 17:11:08
news-image

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள்...

2025-05-17 17:22:05
news-image

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை...

2025-05-17 17:30:21
news-image

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி...

2025-05-17 17:20:47
news-image

தமிழ் மக்கள் கூட்டணியினரால் மல்லாகத்தில் முள்ளிவாய்க்கால்...

2025-05-17 17:06:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயம்...

2025-05-17 16:19:20
news-image

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்க...

2025-05-17 16:09:24
news-image

75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-17 16:19:02
news-image

கனடா நினைவு தூபி இலங்கையில் சிலரின்...

2025-05-17 16:07:13
news-image

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு ;...

2025-05-17 16:18:18