13 வயது பாடசாலை மாணவர்களை விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியை கைது

29 Dec, 2023 | 11:57 AM
image

அநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பாடசாலையில் விளையாட்டு ஆசிரியையாக கடமையாற்றும் 51 வயதுடைய பெண்ணாவார்.

இவர் குறித்த மாணவர்களது பெற்றோர்களிடம் கடந்த 27 ஆம் திகதி அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சிக்கு செல்வதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் மாணவர்களை  வீடுகளுக்கு அனுப்பாமல் எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் நபரொருவரிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த விடுதியில் இருந்து ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சி.டி. விக்ரமரத்ன மரண விசாரணை தீவிரம்:...

2026-07-18 18:20:20
news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின்...

2026-07-18 18:11:25
news-image

அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை:...

2026-07-18 15:53:51
news-image

இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் காணி நிலங்களை...

2026-07-18 17:50:29
news-image

ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு...

2026-07-18 18:08:56
news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23