உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது அவமானம் என்று நினைத்த ஒரு காலம் உண்டு. ஆனால் இன்றோ, அன்றாட உணவையே உணவகங்களுக்குச் சென்றோ அல்லது உணவகங்களில் இருந்து தருவித்தோ சாப்பிடுவதை வழக்கமாகவே ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இத்தனை உணவகங்கள் கடை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
போதாக்குறைக்கு, வீதி உணவுகள் என்ற பெயரிலும் குட்டிக் குட்டி உணவகங்கள். இதனாலேயே, எதைச் சாப்பிடுகிறோம், எதற்காகச் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல், குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டுவதைப் போல, வயிற்றுக்குள் கண்டதையும் கொட்டி வயிற்றை நிறைக்க ஆரம்பித்திருக்கிறோம்.
வயிற்றில் உள்ள தசைகள் சுருங்கி, விரிந்து உணவைக் கடைய வேண்டுமென்றால் வயிற்றில் வெற்றிடம் ஒன்று இருக்க வேண்டும். அதேவேளை, சாப்பிடுபவரின் உடல் நலத்தை ஒட்டியும் சாப்பிடும் உணவின் தன்மையைப் பொருத்தும் நபருக்கு நபர் உணவை சமிபாடடைய வயிறு எடுத்துக்கொள்ளும் நேரம் மாறுபடும். இதனால்தான் இரண்டு வேளை உணவுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும் என்றும் இரண்டு வேளை உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டாம் என்றும் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வயிற்றுக்கு ஓய்வு தருவது நல்லது என்றும் வலியுறுத்தப்படுகிறது.
சமிபாட்டுத் தொகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், உணவு விழுங்குவதில் சிரமம், எடை குறைதல், பசியின்மை, மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி, மலத்தில் இரத்தம், கால் வீக்கம், வயிற்றில் வீக்கம், கட்டி போன்ற அறிகுறிகளைக் கொண்டு கண்டறியலாம்.
ஒருவேளை, சமிபாட்டுத் தொகுதியில் ஏதும் பாதிப்புகள், குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு - ஏற்பட்டிருந்தால், நவீன வைத்திய முறைகளான அல்ட்ரா சௌண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஏனைய உடல் உள்ளுறுப்புகளுக்கு உதவுவதைப் போலவே, சமிபாட்டுத் தொகுதிப் பிரச்சினைக்கும் எண்டோஸ்கோப்பி மூலம் தீர்வு காண முடியும். அஜீரணம், வாந்தி-பேதி, குடல் புண், ரத்தக் கசிவு, உணவுக் குழாய் அடைப்பு, உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், குடலில் ஓட்டை, கணையத்தில் புற்றுநோய், பித்தக் குழாய் அடைப்பு, பித்தக் குழாய் கற்கள், மூல நோய், ‘அபாடஸ் ஹேர்னியா’ போன்ற பிரச்சினைகளை எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும்.
அது மட்டுமன்றி, பித்தக் குழாய் அடைப்பு மற்றும் மஞ்சள் காமாலையைக் கூட எண்டோஸ்கோப்பி மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்.
எனவே, மேற்படி அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு வைத்தியரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.
- சத்யா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM