தனமல்வில பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் 15 வயதுடைய சிறுவன் மற்றும் 56 வயதுடைய தந்தையாவார்.
இவர்கள் காயமடைந்த நிலையில் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM