திருவெம்பாவையை முன்னிட்டு காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கிய பாத யாத்திரை

25 Dec, 2023 | 06:38 PM
image

திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கப்படும் வருடாந்த பாத யாத்திரை 11வது வருடமாக இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியுடன் நேற்று (24) இடம்பெற்றது.

நேற்று காலை 7 மணியளவில் மாதகல் சம்பில்தறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமான பாதயாத்திரையில் பக்தர்கள் பல ஆலயங்களையும் தரிசித்த வண்ணம்  சிவநாமங்களை உச்சரித்த வண்ணம் பொன்னாலை சந்தியினை சென்றடைந்தனர்.

பாதயாத்திரையின்போது பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினால் சிவனடியார்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக காரைநகர் ஆலயங்களை தரிசித்தவாறு காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நேற்று மாலை சென்றடைந்து, அடியார்கள் திருவெம்பாவை பூஜையில் கலந்துகொண்டனர்.

பாதயாத்திரை இடம்பெற்ற வழித்தடத்தில் பொதுமக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது அகில இலங்கை சைவ மகா சபையினர், சிவ தொண்டர்கள், சிவ மங்கையர்கள், சிவனடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00