நாவலப்பிட்டி பிரதேசத்தில் வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்ற இளைஞர் படியில் வழுக்கி வீழ்ந்ததில் கண்ணாடி போத்தல் உடைந்து குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நாவலபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபராவார்.
இவர் இன்று சனிக்கிழமை (23) காலை 11.30 மணியளவில் வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்குவதற்காக கடைக்கு செல்லும் போது வீட்டிற்கு அருகிலுள்ள படியில் வழுக்கி வீழ்ந்து கையில் இருந்த கண்ணாடி போத்தல் உடைந்து கழுத்தில் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM