ஜே.என்.1 கொவிட்  இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கும் உயிரியல் துறை பணிப்பாளர்!

Published By: Vishnu

22 Dec, 2023 | 03:30 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் பிரழ்வின் துணை வகையான ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வைரஸ் ஏற்கனவே சமூகத்திற்குள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொச்சி பிரதேசத்தில் இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளிலும் 30 வீதமானோருக்கு சுமார் 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரோன் பிறழ்வின் ஜே.என்.1 துணை மாறுபாட்டின் காரணம் என சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைப்பு ஆபத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் முந்தைய அலைகளை வெற்றிகரமாக நிர்வகித்துள்ளனர் மற்றும் தொற்றாளர்கள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கையில் பரிசோதனை மிகவும் குறைவாக உள்ளது அல்லது பூஜ்ஜியத்தை நெருங்குவதால், வயதானவர்கள் அல்லது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதைத் தொடங்குமாறும் வைத்தியர் ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

'தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றோம் என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த காலத்தைப் போலவே இந்த ஜே.என்.1 துணை மாறுபாடு வெளிப்படக் கூடும். இது ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறது என்பது என் யூகம். எனவே மக்கள் அனைவரும் காற்றோட்டம் அற்ற மூடிய, நெரிசலான சூழலில் இருந்தால், முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.1 இன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், வாசனை உணர்வின்மை,  சுவை உணர்வு இழப்பு, தொடர்ந்து அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவையாகும்.  உலகின் சில பகுதிகளில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு வலியுறுத்துகின்றேன். தடுப்பூசிகள் இன்னும் செயல்படுகின்றன, மேலும் மக்களுக்கு குறிப்பாக ஆபத்தில் உள்ளவர்களுக்கு பூஸ்டர்கள் தேவைப்படலாம் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:46:44
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12