ஏறாவூரில் மோப்ப நாயின் உதவியுடன் 4 போதைப்பொருள் வியாபாரிகள் கைது

22 Dec, 2023 | 11:03 AM
image

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை மோப்ப நாயின் துணையுடன் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து நேற்று வியாழக்கிழமை (21) அதிகாலை 2 மணியளவில் முற்றுகையிட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

இவர்களிடமிருந்து கேரள கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப்பொருள்கள் மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் நெறிப்படுத்தலில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். 

கைதான சந்தேக நபர்கள் நால்வரையும் விசாரணையின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34