வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28 மாலை அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நேற்று மேலதிக வகுப்புக்களை நிறைவு செய்துவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் தன்னுடன் மேலதிக வகுப்பில் கல்வி கற்ற மாணவர் ஒருவரையும் தனது துவிச்சக்கரவண்டில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஆசிரியரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடை ஒன்றில் நின்றுள்ளார். எனினும் கடைக்குச் சென்ற குறித்த இளைஞன் ஆசிரியர் ஏற்றிச் சென்ற மாணவனை முதலில் தாக்கியுள்ளதுடன், ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இன்று (01) காலை ஆசிரியரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியிலுள்ள பாடசாலையைச் சுற்றியுள்ளவர்கள் பாடசாலைக்குள் சென்று அதிபருக்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு தெரிவித்து வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM