பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் மற்றும் பேஸ்வர் சல்மி ஆகிய அணிகள் மோதின.
இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.
கிலாடியேட்டர்ஸ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் சேஷாட் 38 பந்துகளில் 71 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.
மறுமுனையில் கெவின் பீட்டர்சன் 22 பந்துகளில் 40 ஓட்டங்ளை பெற்றுக்கொடுத்தார்.
பேஸ்வர் சல்மி அணி சார்பாக வஹாப் ரியாஷ் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 201 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இறுதிப் பந்து ஓவரில் 7 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்த பேஸ்வர் சல்மி அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.
பேஸ்வர் சல்மி அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 47 பந்துகளுக்கு 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மொஹமட் நவாஷ் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஹமட் சேஷாட் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக குவேட்டா கிலாடியேட்டர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM