எலிகள் உலகத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் எலிகளை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா முயற்சி எடுத்துள்ளது. இதற்காக ரஷ்யாவில் 3 விஞ்ஞானிகள் குழுக்கள் செயல்பட்டு வருகிறன.
ஆப்பிரிக்காவின் வெள்ளெலிகள் நில கண்ணி வெடிகளை கண்டறிய அங்கோலா, தான்சானியா, மொசாம்பிக், கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறன.
கொலம்பியா இதே நோக்கத்திற்காக ஆய்வக எலிகளை பயன்படுத்துகிறது. இஸ்ரேல் விமான நிலையங்களில் பயண பெட்டிகளை சோதனைச் செய்ய இத்தகைய எலிகளை பயன்படுத்துகின்றனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஓழிப்பதில் ரஷ்யா தீவிரமாக உள்ளது. தற்போது இதற்கு எலிகளை பயன்படுத்தும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ’எலி இராணுவம்’ தயார் செய்து வருகிறது.
எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதி களுக்கு எதிராக இராணுவத்தில் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.
எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றை அறுவை சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும்.
இதன் மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது. தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்களை அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும்.
மோப்ப நாய்களை விட எலிகள் அளவில் சிறியதாக இருப்பதால் அவை எதிரி களின் எல்லைகளுக்குள் எளிதாக நுழைந்து விட முடியும்.
இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணி வெடிகள், ஆயுதங்கள் இருந்தால் தங்களுடைய நுகர்வு சக்தி மூலம் ராணுவ வீரர்களுக்கு எலிகள் தெரிவித்து எச்சரிக்கை செய்யும்.
இது போன்று ஒரு மாபெரும் ’எலி ராணுவத்தை உருவாக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்ட மிட்டுள்ளனர்.
இருந்தாலும் இதில் ஒரு பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம் என்பதால் அதற்கு குறைந்தது 3 மாதங்களில் ராணுவ பயிற்சி அளித்து தயார் படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் இளமையான மற்றும் வயது முதிர்ந்த எலிகளையும் இந்த சோதனையில் ஈடு படுத்த முடியாது. ரஷ்யாவின் ரோஸ்டவ் - ஆன் - டன் நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
இத்தகைய பயிற்சியளிக்கப்படும் எலிகளை எதிரிகளை வீழ்த்த மாத்திரமின்றி மக்களை காப்பாற்ற முடியும்.
உதாரணமாக, பூமியதிர்ச்சி ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்களை சிதறி கிடக்கும் கற்களுக்கு இடையே புகுந்து சென்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என எலிகளின் நுகர்வு சக்தி மூலம் மீட்பு குழுவினர் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM