ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த ரயில் பாதை ஊடாக இயக்கப்படும் மலையக ரயில்கள் தாமதாக சேவையிலீடுபடுமென ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயில் சேவையும், பொடி மெனிக்கே ரயில் சேவையும் இன்று தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இத்துடன் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டுள்ளது .
புகையிரத பாதையில் உள்ள மண்ணை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM