கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், கரைச்சி - கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், மாயவனூர் பகுதியில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மலயாளபுரம் பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், செல்வாநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், இரத்தினபுரி பகுதியில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 405 பேரும், ஜெயந்தி நகரில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேரும், மருதநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும், மாவடியம்மன் பகுதியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேரும், ஆனைவிழுந்தான் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரும், ஸ்கந்தபுரம் பகுதியில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், கனகாம்பிகைக் குளம் பகுதியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், சிவநகர் பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேரும், உருத்திரபுரம் கிழக்கு பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கனகபுரம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், பெரியகுளம் பகுதியில் 101 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேரும், பிரமந்தனாறு பகுதியில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 271 பேரும், தர்மபுரம் கிழக்கு பகுதியில் 220 குடும்பங்களைச் சேர்ந்த 628 பேரும், தர்மபுரம் பகுதியில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேரும், புன்னைநீராவி பகுதியில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், குமாரபுரம் பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும், ஊரியான் பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும், உமையாளபுரம் பகுதியில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும், பரந்தன் பகுதியில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேரும், கண்டாவளை பகுதியில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேரும், முரசுமோட்டை பகுதியில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேரும், புளியம்பொக்கணை பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM