பண்ணையாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டை இறக்குமதி செய்ய நேரிடும் வர்த்தகம் , உணவு பாதுகாப்பு அமைச்சர்

18 Dec, 2023 | 02:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையை பண்ணையாளர்கள் குறைக்காவிட்டால் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

முட்டை உற்பத்தியாளர்களுக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று  வியாழக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் வர்த்தகர்கள் 55 முதல் 65 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்கிறார்கள். பண்ணையாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.

இன்னும் ஓரிரு தினங்களின் முட்டையின் விலையை குறைக்காவிட்டால் பண்டிகைக் காலத்துக்கு தேவையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தையில் பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. பாக்கிஸ்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20