(நா.தனுஜா)
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச்சுட்டி ஆய்வில் பெரும்பான்மையான பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச்சுட்டி ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு அந்நிலையத்தின் கணக்கெடுப்பு ஆய்வுப்பிரிவான சமூகக் குறிகாட்டியினால் (சோஷல் இன்டிகேட்டர்) தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
'ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கமானது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யும் எனக் கூறக்கூடிய பொருளாதார மற்றும் கொள்கை மறுசீரமைப்புக்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொதுமக்கள் பொறுப்புக்கூறவேண்டிய அவசியமில்லை என்றாலும், இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை அவர்கள் தாங்கிக்கொள்ளவேண்டியுள்ளது' என்று அவ்வறிக்கையில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது பகுதியளவில் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் சிங்களம், தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய நான்கு முக்கிய சமூகங்களைச் சேர்ந்த 1350 நபர்களை மாதிரியாகக்கொண்டு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வு முடிவுகளின்படி 94.1 சதவீதமானோர் அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் கணக்கில் வராத அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் எனவும், 94.5 சதவீதமானோர் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டும் எனவும், 94.8 சதவீதமானோர் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்தவேண்டும் எனவும், 95.2 சதவீதமானோர் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். குறிப்பாக பெரும்பான்மையான இலங்கையர்கள் அரசியல் தலைமையின் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை நாட்டின் ஊழல் நிலைவரத்தைப் பொறுத்தமட்டில் 87.2 சதவீதமானோர் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், 8.1 சதவீதமானோர் பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்ததைப்போன்றே தற்போதும் இருப்பதாகவும், 3 சதவீதமானோர் ஊழல் மோசடிகள் குறைவடைந்திருப்பதாகவும். 1.6 சதவீதமானோர் அதுபற்றித் தமக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM