திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாகவும் குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதோடு மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM