கிழக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்ய நடவடிக்கை

Published By: Vishnu

13 Dec, 2023 | 05:15 PM
image

(எம்.மனோசித்ரா)

கிழக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் உடனடியாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை  செத்சிறிபாயவில் அமைந்துள்ள  கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து துரிதமாக பணிகளை நிறைவு செய்யுமாறு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் திட்டப் பணிப்பாளருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

மேலும் பணிகள் நிறைவடைந்துள்ள வீதிகளில் வீதி அடையாளங்கள், பெயர் பலகைகளை நிறுவுதல், வீதிகளில் வெள்ளைக் கோடுகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் அடையாளங்கள் போன்ற பணிகளை துரிதமாக முடிக்க செயற்திட்ட பொறியியலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43