உர ஊழல் தொடர்பாக அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் - சஜித்

Published By: Vishnu

12 Dec, 2023 | 05:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உர ஒப்பந்தம் மூலம் வழங்க வேண்டிய 6.9 மில்லியன் டொலர் தொகையை இராஜதந்திர பிரச்சினையாக்கியது தவறு. அரசாங்கம் தனது பொறுப்பை சரியான முறையில் செய்ய தவறியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது. அதனால் இது தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை பயன்படுத்தி, இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று செவ்வாய்கிழமை (12) எழுப்பிய கேள்விக்கு, விவசாயத் துறை அமைச்சர் பதிலளித்த பின்னர், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

உர ஒப்பந்தம் மூலம் வழங்க வேண்டிய 6.9 மில்லியன் டொலர் தொகையை இராஜதந்திர பிரச்சினையாக்கியது தவறு. காப்புறுதியாளர்களது காலத்தை நீட்டிக்க தவறியது மற்றும் முற்பணமாக எந்தவித காப்புறுதியும் இல்லாமல் நிதியை விடுவித்தமை என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு சீனா பொறுப்பல்ல. இதனை இராஜதந்திர பிரச்சினையாக முன்வைத்து சமரச தீர்வு நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம். இந்த விவகாரம் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் கூறினாலும், ஏன் முன்வைக்கவில்லை என கேட்கிறேன்.

அத்துடன் பத்தலேகொட விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 11 வருடங்கள் 22 பருவங்களாக நடத்திய ஆய்வில் சேதன உரங்களை பயன்படுத்துவதன் மூலம் அறுவடை 21 முதல் 31 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தும், இரசாயன மற்றும் சேதன உரங்கள் இரண்டின் கலவையிலும் அதிக அறுவடை பெற முடியும் என்று கண்டறியப்பட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையை செயலாளர் ஹபுஹின்ன உட்பட  மேலும் பல அதிகாரிகள் இணைந்து அப்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.  

இவ்வாறான அறிக்கைகள் இருந்தும், சேதன உரங்களை நாடியதால், நாடு பெருமளவு பணத்தை இழந்தது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சு மட்டத்தில் குழு அறிக்கை தயாரிக்கப்படும் என பொறுப்பான அமைச்சர் தெரிவித்த போதிலும், தகுந்த தகைமை கொண்ட கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை பயன்படுத்தி இதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.

பொட்டாசியம் குளோரைட் எனும் இரசாயன உரம் இந்நாட்டு விவசாயிகளுக்கு சேதன உரமாக விநியோகிக்கப்பட்டாலும், விவசாயிகளின் கைகளில் காயங்களுடன் உடல்நலப் பிரச்சினைகள் எழும் காரணத்தினால், இடைக்காலக் குழு அறிக்கைகளைத் தயாரிக்காமல் முழுமையான கணக்காய்வு அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நனோ உர ஊழல் மோசடி மூலம் இந்தியாவில் இருந்து சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை விசாரணையோ அல்லது கணக்காய்வோ மேற்கொள்ளப்படவில்லை. நனோ உர ஊழல் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் இரண்டாவது கணக்காய்வு அறிக்கைகளை சபையில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54
news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06