திருகோணமலையில் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல் வெளியீட்டு விழா

11 Dec, 2023 | 06:46 PM
image

எஸ்.ஆர்.தனபாலசிங்கத்தின் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல் வெளியீட்டு விழா   கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை காலை 10  மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கவிஞர் க.யோகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் போன்றோர் வருகை தந்திருந்தனர். 

சிறப்பு விருந்தினர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம், ஓய்வுபெற்ற உப-பீடாதிபதி ந.பார்த்தீபன் ஆகியோருடன் நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம். நியாஸ்,  ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் ஒ.குலேந்திரன், "ஓசை" சஞ்சிகை ஆசிரியர் மூதூர் முகைதீன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, வரவேற்புரையை ஊடகவியலாளர் அ.அச்சுதன் நிகழ்த்த, நூல் அறிமுக உரையினை செள.சந்திரகலா வழங்கினார். 

அடுத்து, நூலின் முதல் பிரதியை மூத்த எழுத்தாளர் சூசை எட்வேட் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, நூலின் நயவுரையை கவிஞர் லலிதகோபன் வழங்கினார். விமர்சன உரையினை முதன்மை விருந்தினர் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் வழங்கினார்.

நாடறிந்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம் முதன்மை அழைப்பாளர் உரையை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் ந.பார்த்தீபன் சிறப்பு விருந்தினர் உரையினை ஆற்ற, ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் வழங்கினார்.

அத்தோடு, அதிபர் சுஜந்தினி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர்கள்  மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ஏராளமானோர்  கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43