தந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : அக்கரப்பத்தனையில் பரிதாபச் சம்பவம் (படங்கள்)

Published By: Ponmalar

27 Feb, 2017 | 08:49 PM
image

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் நிறுத்துவதற்காக செல்லும் போது  பஸ்ஸை பின்நோக்கி செலுத்திய போது, வீதி ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த 86 வயதுடைய முதியவர் பஸ்ஸின் பின்பகுதி சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  பஸ்ஸை செலுத்திய சாரதியின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் ஆறுமுகம் மாரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பஸ்ஸையும் பொலிஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10