கொழும்பு - காலி பிரதான வீதியில் ஹிக்கடுவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதுரடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கவனக்குறைவாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
விபத்திற்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் மேலும் இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஹிக்கடுவை நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது, உயிரிழந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளை கொழும்பிலிருந்து காலி நோக்கி செல்லும் பக்கமாக செலுத்தியுள்ளார்.
இதன்போது, இளைஞன் மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஹிக்கடுவை வெவல சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், இளைஞன் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கொழும்பு 10 ஐ சேர்ந்தவராவார்.
இளைஞன் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM