பிரித்தானியாவின் பதில் என்ன?

Published By: Vishnu

10 Dec, 2023 | 11:00 PM
image

ஹரிகரன்

இலங்­கையில் தமி­ழர்கள் மற்றும் மனித உரி­மைகள் நிலை தொடர்­பாக, பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 5ஆம் திகதி ஒரு விவாதம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மார்ட்டின் டேயினால்,  கொண்டு வரப்­பட்ட ஒரு பிரே­ர­ணையின் அடிப்­ப­டை­யில்- பிற்­பகல் 2.30 மணி தொடக்கம், 4 மணி வரை, சுமார் ஒன்­றரை மணி நேரம் அந்த விவாதம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதற்கு முன்­ன­தாக, இலங்கை தமி­ழர்கள் மற்றும் மனித உரி­மைகள் என்ற தலைப்பில் ஒரு ஆவணம் தயா­ரிக்­கப்­பட்டு, அது பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற நூலக இணை­யத்­த­ளத்தில் டிசெம்பர் முதலாம் திகதி பதி­வேற்­றப்­பட்­டது.

அதே­வேளை, இந்த விவாதம் நடப்­ப­தற்கு முன்னர், அவ­சர அவ­ச­ர­மாக லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ரகம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரு ஆவ­ணத்தை தயா­ரித்து அனுப்­பி­யி­ருந்­தது. போர்க்­கா­லத்தில் வெளி­விவ­கார அமைச்­­ச­­ராக இருந்த ரோஹித்த போகொல்­­லா­கம இப்­போது லண்­டனில் இலங்­கைத் தூது­­வ­ராகப் பொறுப்­­பேற்­றி­ருக்­கி­றார்.

அவர் இந்த ஆவ­ணத்தின் மூலம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கவ­னத்தை ஈர்க்க முற்­பட்டார்.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்­ட­பத்தில் இலங்கை தொடர்­பான விவாதம் நடப்­ப­தற்கு முதல் நாள் அவர், ஐ.நா அமை­திப்­படை தொடர்­பான கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக துருக்கியின் அங்­கா­ரா­வுக்குப் புறப்­பட்டுச் சென்­றி­ருந்தார்.

இதனால், அவர் லண்­டனில் இல்­லாத நிலை­யில்தான், பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் இடம்­பெற்­றது.

இலங்கைத் தூத­ர­கத்­தினால் பிரித்­தா­னிய எம்.பிக்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட ஆவ­ணத்தில், இரண்டு முக்­கிய விட­­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மறு ஆய்­வுக்­குட்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன என்­பது ஒன்று.

காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்­றி­ருக்­கி­றது, அது காணாமல் போனோர் தொடர்­பான ஆவ­ணங்­களை பெற்றுக் கொடுக்க உத­வு­கி­றது, காணா­மல்­போன மூவர் இறந்து போன­தையும், 16 பேர் உயி­ருடன் இருப்­ப­தையும் கண்­டு­பி­டித்­துள்­ளது என்­பது இரண்­டா­வது விடயம்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கும் விட­யத்தில் அர­சாங்கம் போதிய அக்­கறை செலுத்­த­வில்லை என்­பது உல­க­றிந்த உண்மை.

அடுத்து, காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் மீது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நம்­­­பிக்கை வைத்­தி­ருந்தால் அவர்கள் ஏன் வீதி வீதி­யாக போராட்டம் நடத்திக் கொண்­டி­ருக்கப் போகி­றார்கள்?

காணா­மல்­போ­ன­தாக 22 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்­களின் பெயர்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில்- 3 பேர் இறந்­த­தையும், 16 பேர் உயி­ருடன் இருப்­ப­தையும் கண்­டு­பி­டித்­தி­ருப்­ப­தாக சாதனைப் பட்­டியல் கொடுப்­ப­தை­யிட்டு அர­சாங்கம் வெட்­கப்­ப­ட­வில்லை.

இந்தக் கணக்கே, அந்தச் செய­ல­கத்தின் செயற்­திறன் எந்­த­ள­வுக்கு மோச­மாக இருக்­கி­றது என்­பதை துலாம்­ப­ர­மாக காட்­டு­கி­றது.

இலங்கை அர­சாங்­கத்தின் இந்த ஆவ­ணம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற விவா­தத்தின் போது, உறுப்­பி­னர்­களால் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உக்ரேன் போர், காஸா மோதல்­க­ளுக்­குள் கடந்த ஒரு வரு­டத்­துக்கு மேலாக உலகம் தலையை வைத்துக் கொண்­டி­ருக்கும் நிலையில், இலங்­கை­யில் தமி­ழர்­களின் நிலை குறித்து சர்­வ­தேச அளவில் பெரி­தாக எந்த கவ­னமும் செலுத்­தப்­ப­ட­வில்லை.

அதற்கு முன்னர் கொவிட் தொற்றும், இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­யும், தமி­ழர்­க­ளுக்­கான நீதி, பொறுப்­புக்­கூறல் மற்றும் உரி­மைகள் சார்ந்த விட­யங்­களை பின்­னுக்குத் தள்ளி விட்­டன.

இதனால் பலரும் மறந்து போயி­ருந்த  பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு, பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றி­ருக்கும் விவாதம், உத­வி­யி­ருக்­கி­றது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விவ­காரம், பௌத்­த­ம­ய­மாக்கல், இரா­ணு­வ­ம­ய­மாக்கல், தமிழ் மக்­களின் நினை­வேந்தல் உரிமை மறுக்­கப்­ப­டு­வது, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ச்­சி­யாக கைதுகள் இடம்­பெ­று­வது, செயற்­பாட்­டா­ளர்கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதும், அச்­சு­றுத்­தப்­ப­டு­வதும் என நீண்டு செல்லும் பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கவ­னத்தில் எடுக்­கப்­பட்­டது.

போர் முடி­வுக்கு வந்து 15 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும் இரா­ணுவ மய­மாக்கல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது பிரித்­தா­னி­யா­வி­னதும், சர்­வ­தே­சத்­தி­னதும் கூட்டுத் தோல்வி என்று தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார், தொழிற்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன் மக்டோனல்.

இலங்­கையில் போர்க்­குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது அமெ­ரிக்­காவும் கன­டா­வும் தடை­களை விதித்­தி­ருப்­பதைப் பாராட்­டிய அவர், அது­போல பிரித்­தா­னி­யாவும் தடை­களை விதிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

குறிப்­பாக வர்த்­தக தடைகள், வரி­களின் ஊடாக இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்­பிட்டார்.

போர்க்­குற்­றம் ­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக- அமெ­ரிக்கா மற்றும் கனடா ஆகியன போன்று பிரித்­தா­னி­யாவும் தடை­களை விதிக்க வேண்டும் என்று இந்த விவா­தத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி ஜெனரல் ஷவேந்­திர சில்வா உள்­ளிட்­ட­வர்­களின் பெயர்­களும் இதன்­போது குறிப்­பிட்டுக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் உறுப்­பினர் எலியட் கோல்பேர்ன் உரை­யாற்­றிய போது, வடக்கு கிழக்கு இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இலங்கை இரா­ணு­வத்தின் 20 டிவி­சன்­களில் 16 டிவி­சன்கள், இந்தப் பகு­தி­க­ளில நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­ட­துடன்,  

பிரித்தானியாவின்.. (முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

நிலை­யான மற்றும் நீடித்த அமை­தியை உரு­வாக்­கு­வ­தற்கு இரா­ணு­வ­ம­ய­நீக்கம் முக்­கி­ய­மா­னது என்றும் வலி­யு­றுத்­தினார்.

சர்­வ­தேச நாணய நிதியம், நிதியை விடு­விப்­ப­தற்கு இலங்­கையின் பாது­காப்­புச செல­வி­னங்­களை குறைக்­கு­மாறு நிபந்­­த­னையை முன்­வைத்து வலி­யு­றுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்­டி­­ருக்­கிறார்.

இந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய உறுப்­பி­னர்கள் பலரும், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தைத் தாண்­டிய கடு­மை­யான நட­வ­டிக்­கைளை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

பிரித்­தா­னி­யாவும், ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை உள்­ளிட்ட வர்த்­தகச் சலு­கை­களை முன்­னி­றுத்தி அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்றும், பொரு­ளா­தார மற்றும் பயணத் தடை­களை விதிக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த விவா­தத்தில் பதி­ல­ளித்துப் பேசிய, பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார, பொது­ந­ல­வாய அபி­வி­ருத்­திக்­கான பாரா­ளு­மன்ற இரா­ஜாங்க அடி­நிலைச் செய­லாளர், லியோ டொசெர்ட்டி,  இலங்­கையில் குறிப்­பாக தமி­ழர்­களின் மனித உரி­மைகள் நிலை குறித்து பிரித்­தா­னியா உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கி­றது என்று கூறி­யி­ருந்தார்.

சர்­வ­தே­சத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­களை இலங்கை மீறு­கி­றது என்றும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­கி­றது என்றும் தமிழ்ச் சமூ­கத்­தினர் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்டு ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வது   எங்­க­ளுக்கு தெரியும் என்றும்,

வடக்கு  கிழக்கில் படை­யி­னரின்  கண்­கா­ணிப்­புகள் அச்­சு­றுத்­தல்கள் தொடர்­வது பற்றி தாங்கள் அறிந்­தி­ருப்­ப­தா­கவும், லியோ டொசெர்ட்டி கூறி­யி­ருந்தார்.

மனித உரி­மைகள் கரி­ச­னைக்­கு­ரிய 32 நாடு­களில் இலங்­கை­யையும் ஒன்­றாக வைத்­தி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்த பிரித்­தா­னிய இரா­ஜாங்க செயலர்,  இந்த நிலை­மையை மாற்­று­வ­தற்கு அர­சாங்­கத்தின் பங்­க­ளிப்பு அல்­லது உத்தி என்ன என்­பது பற்­றிய இந்த விட­யத்­தையும் குறிப்­பி­ட­வில்லை.

போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக தடை­களை விதிப்­பது உள்­ளிட்ட விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி இடம்­பெற்ற இந்த விவா­தத்தில் அதனை சார்ந்த எந்த வாக்­கு­று­தி­யையும் பிரித்­தா­னிய அர­சாங்கம் வழங்க முன்­வர வைக்­க­வில்லை.

ஆனாலும் இந்த விவாதம் பிரித்­தா­னிய அர­சுக்­கான  அழுத்­தங்­களை அதி­க­ரிக்க செய்­தி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மா­னங்­களைக் கொண்டு வரு­வ­தற்கு அப்பால் இலங்­கையில் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை நிறுத்துவது, பொறுப்பு கூறல் சார்ந்து செயற்படுவது போன்ற விடயங்களில்,  பிரித்தானியாவுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை பிரித்தானிய பாராளுமன்ற விவாதம் வெளிப்படுத்தி இருக்கிறது.

இதற்கு அப்பால் பிரித்தானிய அரசாங்கமே  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- எடுக்க முடியும்.

அது எவ்வாறானது என்பதையிட்டு எவ்வித கருத்தும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படுத்தப்படாதது ஏமாற்றத்துக்குரிய ஒரு விடயம் தான்.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க பிரித்தானியா தயாராகிறது என,  தகவல்கள் வெளியாகி பல மாதங்களாகியும் அது சார்ந்த எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்த இந்த விவாதமும் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களும் அதற்கான உந்துதல்களை பிரித்தானிய அரசுக்கு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்