பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை யார் கோரியது ? - இராதாகிருஷ்ணன் கேள்வி

09 Dec, 2023 | 08:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை யார் கோரியது. ஜனாதிபதியா, தொழிற்சங்கங்களா? அல்லது பெருந்தோட்ட மக்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் அறிவிப்பு நாடகமாக அமைந்து விட கூடாது. தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 1700 ரூபா சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (09)  இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின்   செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்படுகின்றன. தோட்டங்களின் காணிகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பௌதீக வளங்கள் விற்கப்படுகின்றன. தோட்ட கம்பனிகள் பெருந்தோட்டங்களை திட்டமிட்டு வீழ்ச்சிக்கு தள்ளுவதை பிரதான இலக்காக கொண்டுள்ளன.

பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் மீதான விவாதம் நேற்று இடம்பெறும் என்று அறிந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது ஒரு நாடகமாக அமைய கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

1700 ரூபா சம்பளம் என்பதை யார் குறிப்பிட்டது. தொழிற்சங்கங்களா? ஜனாதிபதியா?  அல்லது பெருந்தோட்ட மக்களா ?என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 1700 ரூபா   ஒருபோதும் சாத்தியமற்றது. 1700 சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசகருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த  கோபால் பாக்லேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை கடந்த காலங்களில் கொவிட் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு முகம் கொடுத்திருந்த போது இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் இலங்கைக்கு  முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதை மறக்க கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13