மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

09 Dec, 2023 | 09:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகதில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த இனம் தெரியாத நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு  அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் மஹாநாயக்க தேரருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக வந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை  (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மிஹிந்தலை ரஜமஹா விகாரை மஹாநாயக்க தேரர் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தெரிவித்திருந்த கூற்று மிகவும் பாரதூரமானது.

அதாவது மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகதில் இனம் தெரியாத இருவர் கடந்த 3வாரங்களாக இருந்து வந்துள்ளதாகவும், அந்த பூமி பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் அமைப்பினர் மிகவும் அமைதியான முறையில் அங்கு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்  குறிப்பிடடிருந்தார்.

ஆனால் கடந்த 3வாரங்களாக இனம் தெரியாத 2பேர்  இராணுவத்தினர் என தெரிவித்துக்கொண்டு அங்கு இருந்துள்ளனர்.

ஆனால் குறித்த இனம் தெரியாத 2பேரும் பொலிஸாருக்கும் சிவில் அமைப்பினருக்கும் பிடிபட்டிருக்கின்றனர். பாதுகாப்பு பிரிவே குறித்த 2பேரையும் கைது செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் இருந்த பொலிஸார். 

இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் யாருக்கும் இந்த இனம் தெரியாத நபர்கள் யார் என தெரியாது. ஆனால் குறித்த 2பேரும் நொச்சியாகம முகாமில் பிரதான கட்டளையிடும் அதிகாரியின் ஆலோசனைக்கமைய இங்கு அனுப்பப்பட்டிருப்பதாக தற்போது தெரியவந்திருக்கிறது.

அதனால் இது மஹாநாயக்க தேரருக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லதுஹ அவரின் உயிரிக்கு பாதிப்பை ஏற்படுத்தவா திட்மிடப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் மஹாநாயக்க தேரரின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக எங்கள் அனைவரும் பொறுப்பு இருக்கிறது. மஹாநாயக்க தேரர் நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்காக வெளிப்படையாக பேசக்கூடியவர்.

இதன்போது பல்வேறு கட்சிகளுக்கும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதனை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டும்.

எனவே இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என கைது செய்யப்ப்டிருக்கும் இனம் தெரியாத குறித்த நபர்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி அவர்கள் விகாரை வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக இருந்துவந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57