இன்றைய நவீன காலத்தில் பலருக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கும் எளிதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமையளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
* இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகின்றது. இவ்வாறு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சில பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
* நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் நாம் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தேவையான ஆற்றல்களையும் வழங்குகிறது.
* நாம் ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருநாளைக்கு அதிகபட்சம் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களிடம் எதிர்த்து போராட உதவுகிறது.
* தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோயெதிர்ப்பு உயிரணு இயக்கம் மற்றும் எதிர்வினைக்கு உதவுவதோடு, நாம் உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
* மன அழுத்தத்தினால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைய தொடங்கும். இது உடலில் உள்ள ஹோர்மோன்களின் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். மன அழுத்தத்தில் இருந்து நேர்மறையான மனநிலைக்குத் திரும்புவதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
- கே.ஆர்.கோபி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM