போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நந்துன் சிந்தக அல்லது ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கே பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதனைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக்கட்டா' என்ற நந்துன் சிந்தக விக்கிரமரத்னவை உடனடியாக உரிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலே இவ்வாறு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரக்கட்டா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM