புலம்பெயர் அமைப்புகள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன - அலி சப்ரி

Published By: Vishnu

07 Dec, 2023 | 07:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒருசிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள்.

பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது என வெளிவிவகாரத்துறை  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இஸ்ரேல்- காஸா போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊடாக இந்த  அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும்  போரை விடுத்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு  தீர்வு காண வேண்டும் என்பதையே முழு உலகும் வலியுறுத்துகிறது.நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.

தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பிரிவினைவாதம் பற்றி பேசுகிறார்கள் என்று நான் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.'புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்தில் ஒருசிலரும்  பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறார்கள்' என்றே குறிப்பிட்டேன்.

பொருளாதார மீட்சி தொடர்பில் அண்மையில் நாங்கள் புலம்பெயர்  அமைப்புக்களுடனும்,சர்வதேச சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் பிரிவினைவாதம் பற்றி பேசினார்.அத்துடன் பிரிவினைவாதத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.ஆகவே இதற்கு எம்மால் இணங்க முடியாது. சமஷ்டி பற்றி பேசுவது பிரச்சினையில்லை ஐக்கிய நாட்டுக்குள்   ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்  என்பது எமது நிலைப்பாடு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57