(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒருசிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள்.
பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இஸ்ரேல்- காஸா போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே முழு உலகும் வலியுறுத்துகிறது.நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.
தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பிரிவினைவாதம் பற்றி பேசுகிறார்கள் என்று நான் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.'புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்தில் ஒருசிலரும் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறார்கள்' என்றே குறிப்பிட்டேன்.
பொருளாதார மீட்சி தொடர்பில் அண்மையில் நாங்கள் புலம்பெயர் அமைப்புக்களுடனும்,சர்வதேச சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் பிரிவினைவாதம் பற்றி பேசினார்.அத்துடன் பிரிவினைவாதத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.ஆகவே இதற்கு எம்மால் இணங்க முடியாது. சமஷ்டி பற்றி பேசுவது பிரச்சினையில்லை ஐக்கிய நாட்டுக்குள் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM