தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

06 Dec, 2023 | 09:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் புத்தசாசன,சமய ,கலாசார அலுவல்கள் அமைச்சின் தொல்பொருள் திணைக்களத்துள்ளான  நிதி ஒதுக்கீடு 39  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

ஆதரவாக 44  வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.175 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் புத்தசாசனம் மற்றும் சமய,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தொல்பொருள் திணைக்களத்துக்கான  நிதி ஒதுக்கீடு  மீது  வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைசுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 39 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.

 இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம்,எம்.ஏ.சுமந்திரன்,சிறிதரன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32