மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக சஜித் பிரேமதாச சவால்

Published By: Vishnu

06 Dec, 2023 | 07:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சஜித் பிரேமதாச அமைச்சராக  மத்திய கவாசார நியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

அத்துடன் தனது மனைவிக்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில், ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது உரையின்போது, சஜித் பிரேமதாச கலாசார அமைச்சராக இருந்தபோது மத்துய கலாசார நிதியத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் மேற்கொண்ட பணிகளுக்கு கலாசார நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதி பெறப்படவில்லை என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கலாசார நிதியத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நியத்துக்கும் நிர்வாக சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட வசந்த ஜினதாச குழுவின் அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வசந்த ஜினதாச அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். உண்மைகள் வெளிப்படும் என்ற காரணத்தினாலேயே அதனை வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர் என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குறிப்பிடுகையில், மத்திய கலாசார நிதியத்தை பயன்படுத்திக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் திருத்தப்பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கணக்காய்வு அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள்  அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் உடனடியாக பதவி விலகுவேன் என்றார். இதன்போது மஹிந்தானந்த எம்.பி. தனது கையில் இருந்த ஆவணத்தை காட்டி இதோ அமைச்சின் உள்ளக கணக்காய்வு அறிக்கை இருக்கிறது. இதனை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நீங்கள் தெரிவித்ததுபோல் தற்போது உடனடியாக பதவி விலகவேண்டும் என்றார்.

குறித்த ஆவணத்தை பார்த்துவிட்டு சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், 2022இல் இவர்களின் கையாட்களை நியமித்து எனக்கு சேறு பூச பொய் அறிக்கை தயாரித்திருக்கிறார்கள்.மஹிந்தானந்த எம்.பி. கையளித்த அறிக்கை தேசிய கணக்காய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல என்றார்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தெளிவுபடுத்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அவரால் கதைக்க முடியாமல் பல தடவைகள் இடையூறு ஏற்பட்டது. இறுதியாக அவர் தெளிவுபடுத்துகையில், கலாசார நிதியத்தின் மூலம் 2019 வேலைகளுக்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது. என்றாலும் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, கணக்காய்வு திணைக்களத்தின் உள்ள விசாரணை அறிக்கையிலேயே சஜித் பிரேமதாச தனது மனைவிக்கு 16 பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததுபோல் பதவி விலகவேண்டும் என தெரிவித்து அவர் சபையில் இருந்து சென்றார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை சுமுகமாக இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்...

2025-02-11 14:17:27
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05