பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக கூறி பண மோசடி - மூவர் கைது

Published By: Digital Desk 3

06 Dec, 2023 | 04:42 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியம்பலாண்டுவ மற்றும் அத்திமலை பிரதேசங்களில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நபர்களால் இவ்வாறான பணம் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாகக் தங்களை அடையாளப்படுத்திக்  கொண்டு பிரதேசவாசிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26 ஆயிரம் ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று  வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர். 

இதேவேளை நேற்றுமுன்தினம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறு பணசேகரிப்பில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 70,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் 32 வயதான குறித்த பெண் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த 2 சந்தேக நபர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53