ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய தபால் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைபொருள் மாத்திரைகள் அடங்கிய 25 பொதிகளை சோதனை செய்த போது குறித்த போதைபொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது போதைபொருள் மாத்திரைகள் அனுப்பப்பட்ட முகவரிகள் போலியானது என்பதுடன், குறித்த போதைபொருள் மாத்திரைகளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைபொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM