ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு உடனடி தீர்வு சாத்தியமற்றது - கல்வி அமைச்சர்

05 Dec, 2023 | 08:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிப்பு செய்துள்ளதால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண்பது  சாத்தியப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற  வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தின்போது எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாவை வழங்குவதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு  கொடுப்பனவு அதிகரிப்பை வழங்குவதற்கு  30 பில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

இலவச பாடநூல் வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபா, பகல் உணவுக்காக 16 பில்லியன் ரூபா, மாணவர்களுக்கு பாதணிகள் வழங்குவதற்காக 2 .5 பில்லியன் ரூபா ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

இவற்றை எந்த வகையிலும் வழங்காமல் நிறுத்த முடியாது. கண்டிப்பாக மாணவர்களுக்கு இவற்றை வழங்கியே ஆக வேண்டும்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அவர்களது தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக போராட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அவர்கள் இது விடயத்தில் தெளிவுடன் செயற்படுவார்கள் என நான் நினைக்கின்றேன்.

அதற்கிணங்க இந்த வருடத்தில் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது. அடுத்த வருடம் முதல் நாம் கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம். ஆசிரியர்கள் நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19